மழைக்காலங்களில் தெருக்களில் வெள்ளம் பெருகி ஓடும்போது மக்கள் வீடுகளுக்குள் முடங்குவதும், பாதுகாப்பான இடங்களைத் தேடி அலைவதும் தான் வழக்கமான ஒன்று. ஆனால், இயற்கை தரும் எந்த அச்சுறுத்தலும் தன் தூக்கத்தைக் கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த நபர் ஒருவர் செய்த காரியம், தற்போது இணையவாசிகளை ஒரே நேரத்தில் ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.
இடுப்பளவு அல்லது முழங்கால் அளவுக்குத் தெருவில் வெள்ள நீர் தேங்கி நிற்கும் நிலையிலும், சிறிதும் சலனமின்றி அங்கே கொசுவலை கட்டி, அதற்குள் சுகமாக உறங்கும் நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
வைரலாகி வரும் அந்த வீடியோவில், சுற்றிலும் மழைநீர் தேங்கி ஒரு குளம் போலக் காட்சியளிக்கும் தெருவின் நடுவே, அந்த நபர் மிக நேர்த்தியாகக் கொசுவலையைக் கட்டி அதற்குள் படுத்து உறங்குகிறார். சுற்றியுள்ள மனிதர்களும் வாகனங்களும் என்ன நடக்கிறது என்று அவரைப் பார்த்து வியந்தபடி கடந்து சென்றாலும், அவர் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.
மேலும் “வாழ்க்கையில் எவ்வளவு பெரிய புயல் வந்தாலும் அமைதியை இழக்கக் கூடாது” என்பதை இந்த நபர் நகைச்சுவையாக நிரூபித்திருப்பதாக நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.பி இந்த விசித்திரமான நிகழ்வு ஒருபுறம் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் பார்க்கப்பட்டாலும், மறுபுறம் வெள்ள நீர் தேங்கியுள்ள சூழலில் கொசுக்கடி மற்றும் நோய்த்தொற்றுகளில் இருந்து தப்பிக்க அவர் கொசுவலையைப் பயன்படுத்திய சாதுர்யம் பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
அதோடு என்னதான் வெள்ளப்பெருக்கு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த பிரச்சனைகள் மக்களைப் பாதித்தாலும், தங்களுக்கு ஏற்படும் சிரமங்களைக்கூடத் தங்களது பாணியில் சமாளிக்கும் மக்களின் மனநிலையை இந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வரும் இந்த வீடியோ, இணையவாசிகளுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமைந்துள்ளது.
See this Instagram video by @prankstar_bunty https://t.co/C9zbcMC7wW
“>
