71 அடி உயரம் உள்ள வைகை அணை கனமழையால் முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து ஐந்து மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து 3,106 கன அடி உபரி நீர் பெரிய மதகுகள் வழியாக திறக்கப்படுவதால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கையாகிய மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கவும் குளிக்கவும் கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.