ஆண்டு தோறும் தமிழக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.1000 கொடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்காக டோக்கன் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் யார் யாருக்கு பொங்கல் பரிசு ரூ.1000 கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகை ரூ1,000 வழங்கப்படாது. ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பரிசுத் தொகை பொங்கலுக்கு முன்பு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.