தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த இரண்டு லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வருகின்ற ஜனவரி 10ம் தேதி வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. மேலும் மேல்முறையீடு செய்தவர்களில் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களில் தகுதியானவர்களுக்கு அடுத்த மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.