தமிழ்நாடு மாநில நீதித்துறை சேவையில் சிவில் நீதிபதி பதவிக்கு 2011 நவம்பர் நாலாம் தேதி முதன்மை எழுத்து தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. தேர்வு முடிவு அடிப்படையில் தற்போது தற்காலிகமாக வாய்வழி தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் விண்ணப்பதாரர்களுடைய பட்டியல் வெளியானது. ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து அசல் சான்றிதழ்களோடு தேர்வர்கள் வாய்வழி சோதனையில் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சோதனை நடத்தப்படும் தேதி மற்றும் நேரம் குறித்து தனிப்பட்ட தகவல்கள் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் தபால் மூலமாக அனுப்பப்படாது . எனவேஅதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி நிறுவனத்தின் தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை மற்றும் அறநிலைத்துறை கீழ்நிலை பணிகளில் உள்ள குரூப் 8  நிர்வாக அதிகாரி பதவிக்கான 77 காலியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வுகளில் நேரடி சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களின் தற்காலிக தேர்வு பட்டியல் ஆனது தற்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.