கொரோனாவிற்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட சமயத்தில் அதிக விடுமுறை ஈடு செய்யும் விதமாக முன்னதாக சனிக்கிழமைகள் அனைத்தும் வேலை நாட்களாக செயல்படுத்தப்பட்டது. அதன் பிறகு நிலைமை சீரடைந்ததால் மாணவர்கள் கல்வி ஆண்டின் தொடக்கம் முதல் பள்ளிகளுக்கு செல்லும் நிலை ஏற்பட்ட சமயத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறையானது அனைத்து சனிக்கிழமைகளும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் டிசம்பர் மாதம் மிக்ஜாம்  புயலின் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கன மழை மற்றும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதற்காக பள்ளி மாணவர்களுடைய நலன் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது .தற்போது இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 4, 20 பிப்ரவரி 3, பிப்ரவரி 17 ஆகிய நான்கு சனிக்கிழமைகள் சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.