பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்குச் செல்வோர் நாளை முதல் விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. 2024ஆம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்குகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் தொடர்ச்சியாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, ரயில் டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

நாளை தினம் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 14ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 15ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்யலாம் .செப்டம்பர் 16ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ஆம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 17ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ஆம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 18ஆம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ஆம் தேதி பயணம் செய்யலாம். செப்டம்பர் 19ஆம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ஆம் தேதி பயணம் செய்யலாம்.