தொண்டர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்துக்களை அணி திரட்டுவதற்காக கிருத்துவர்களை பலிகடாக்குவது…. இந்துக்களை அணி திரட்டுவதற்காக தேவாலயங்களை தகர்ப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக மசூதிகளை இடிப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக ராமர் பெயரை உச்சரிப்பது, இந்துக்களை அணி திரட்டுவதற்காக ராமர் கோயில் கட்டுவது, இதெல்லாம் ராமர் மீதுள்ள பற்றால் அல்ல. இந்து மதத்தின் மீதுள்ள பற்றால் அல்ல… இவை அனைத்தும் வாக்குவங்கிக்காக

இந்துக்களை ஏன் அணி திரட்ட வேண்டும் ? பிஜேபி நாட்டை  தொடர்ந்து ஆள வேண்டும். அவர்களுக்கு பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை தக்க வைத்துக் கொண்டால் ? தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் இருக்க முடியும். இந்து என்கிற இந்த அரசியலை கையில் எடுத்தால் பிஜேபியை எதிர்க்கிற காங்கிரசால்… பிஜேபியை எதிர்க்கிற கம்யூனிஸ்ட் கட்சிகளால்… பிஜேபியை எதிர்க்கிற இதர அரசியல் கட்சிகளால்…. நம்முடைய அரசியலையும் பேச முடியாமல் தடுமாறுவார்கள்.

இந்துத்துவாவை எதிர்த்தால் இந்துக்களை எதிர்க்கிறார்கள் பார்த்தீர்களா…?  பிஜேபியை எதிர்க்கிறார்கள் என்று சொல்ல மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்யை எதிர்க்கிறார்கள் என்று சொல்ல மாட்டார்கள்…சங்பரிவார்களை எதிர்க்கிறார்கள் என்று சொல்ல மாட்டார்கள் நாம் பேசுகின்ற இந்துத்துவாவை…  காங்கிரஸ் இந்துத்துவா தவறு என்று சொன்னால் ? பார்த்தீர்களா…  பார்த்தீர்களா…. இந்துக்களே… உங்களுக்காக நாங்கள் போராடுகிறோம். நமது இந்துத்துவா கொள்கையே அவர்கள் எதிர்க்கிறார்கள். என்று எதிர்க்கட்சிகளை திக்கு முக்காட வைக்கும் யுக்தியாகவும் இதை கையாளுகிறார்கள்.  இந்த வார்த்தையையே அவர்கள் ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள் என தெரிவித்தார்.