கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ரஞ்சித், சைமன், ரித்தீஷ் ஆகிய மூன்று பேரும் ஒரு குற்றவழக்கில் சாட்சியம் அளிக்க வந்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துவிட்டு திரும்பி செல்கையில், 6 பேர் கொண்ட கும்பல் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் அவர்களை தாக்கியுள்ளது. இதில் ஒரு நபர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில் ரஞ்சித், ரித்தீஷ் ஆகியோர் மீது அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பிய அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.