சனாதனத்திற்கு எதிராக பேசியதாக அமைச்சர் உதயநிதி, அதனை கண்டு கொள்ளாத இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பதவி விலக கோரி திருச்சியில் பாஜகவினர் நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் போலீசாருக்கு பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில்,சனாதனத்தை ஒழிப்போம் என பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யவில்லை. ஆனால் போலீசார் என்னை கைது செய்துள்ளனர். பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.