பேருந்துகளில் ஓட்டுநரை தவிர வேறு யாரும் கட்டாயம் பேருந்து இயக்கக் கூடாது என்று போக்குவரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழக கிளைகளில் ஒரு சில இடங்களில் நடத்துனர்கள், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்து இயக்குவதாக தெரிய வருகிறது. எந்த சூழ்நிலையிலும் ஓட்டுநர் தவிர மற்றவர்கள் பேருந்து பணிமனை உள்ளே மற்றும் வெளியே கண்டிப்பாக இயக்கக் கூடாது.

கிளை மேலாளர்கள் மற்றும் பணியிள் உள்ள மேற்பார்வையாளர்கள் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாத வண்ணம் கண்காணிக்க வேண்டும். இது குறித்த தகவலை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் ஒட்டவும் தொடர் முயற்சியாக பயிற்சி பள்ளிக்கு வரும் அனைவருக்கும் தெரியப்படுத்த இந்த சுற்றறிக்கை மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது