2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியை அமைச்சர் கே.என் நேரு மகன் அருண் நேருவுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்க வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு ஐவர் குழுவிடம் பெரம்பலூர் நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிகிறது. கடந்த 2019ல் பெரம்பலூர் தொகுதி திமுக கூட்டணியில் ஐஜேகே பாரிவேந்தருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பாரிவேந்தர் பாஜக கூட்டணிக்கு சென்றுள்ளதால் தற்போது திமுகவிற்கு அந்த பெரம்பலூர் தொகுதியை ஒதுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.