தமிழகத்தில் வரும் 12ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்த போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி வரும் 12ஆம் தேதி முதல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில் தொடர் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை சென்னையில் தொடர் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.