இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அது தவிர பல்வேறு மாநில அரசுகளும் விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் அவர்கள் மறு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அரசு ரொக்க பரிசும் வழங்குகிறது.

அதன்படி ஜார்கண்ட் மாநில அரசு விதவைகளுக்கு அருமையான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மறுமணம் செய்து கொள்ளும் விதவைகளுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதவைகள் கண்ணியத்துடன் வாய்ந்த திட்டம் உதவும் என்பதால் இதனை அமல்படுத்தியுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.