பூலோகத்தின் கைலாசம் திருவண்ணாமலை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். லால் சலாம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ரஜினி, இந்தப் படத்திற்காக பாண்டிச்சேரி மற்றும் திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புக்கு சென்றோம். அங்குள்ள மக்கள் என்னை கவனித்த விதத்தை நான் மறக்க மாட்டேன். தங்கள் வீட்டு மகளாக என்னை பார்த்தனர். அளவுக்கு அதிகமான அன்பை என் மீது காட்டினார்கள். அவர்களை மறக்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.