உடல்நலக்குறைவால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 28ஆம் தேதி காலமானார். அவரது மறைவு திரையுலகினர் மட்டுமல்லாது பொதுமக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. பல்வேறு தரப்பினரும் நேரில் அஞ்சலி செலுத்தியிருந்தனர். இந்நிலையி என்னை அரசியலில் அறிமுகப்படுத்திய உயர்ந்த மனிதர் விஜயகாந்த் என நடிகர் மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சினிமா பற்றி எனக்கு கொஞ்சம் தெரியும். அது பற்றி தெரியாமலே இன்று நிறைய பேர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். சினிமா மிக பவர்ஃபுல்லானது. அதில் சாதிப்பது அத்தனை எளிதானதல்ல. தொடர் போராட்டம், அவமானம் எல்லாவற்றையும் தாண்டி பிறகே இலக்கை அடைய முடியும் என அவர் தெரிவித்தார்.