இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் உடல் இன்று தேனி மாவட்டம் கூடலூர் லோயர் கேம்ப் அருகே உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த அவர், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சென்னை தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

தொடர்ந்து, இரவு சாலை மார்க்கமாக தேனிக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், இளையராஜாவின் பண்ணை வீட்டில் இளையராஜாவின் தாய் சின்னத்தாயி, மனைவி ஜீவா ஆகியோர், அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் பவதாரிணியின் உடல் இன்று நண்பகலில் அடக்கம் செய்யப்படவுள்ளது.