இந்தியா உட்பட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஜே என் 1 என்ற புதிய வகை கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை தடுப்பதற்காக அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா இரண்டாவது தவணை தடுப்பூசி 88 சதவீத மக்களுக்கு போடப்பட்டுள்ளது எனவும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கூறியுள்ள நிலையில் புதிய வைரஸுக்கு தடுப்பூசி தேவையில்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.