புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மற்றும் புதுச்சேரியில் பணிபுரியும் 5 ஆயிரத்து 624 மத்திய அரசு பணியாளர்களுக்கு தலா 10,000 ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மத்திய கூட்டுறவு சேமிப்பு மற்றும் கடனுதவி சங்கத்தின் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் வங்கி கணக்கில் தள பத்தாயிரம் ரூபாய் வட்டி இல்லா முன்பணமாக செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.