பிரபல பாலிவுட் பாடகி மல்லிகா ராஜ்புத் (35) என்ற விஜயலட்சுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் அனைவரும் தூக்கிக் கொண்டிருந்த சமயத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்த இதுவரை தெரியாததால் போலீசார் வழக்கு பதிவு செய்த தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இவரின் மரணம் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது