தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர் ராம் சரணின் மனைவி உபாசனா காமினேனி, ஒரு பேட்டியில், தனது கணவர் மற்ற நடிகைகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடித்தபோது, ஆரம்பத்தில் தனக்கு சங்கடமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

திரைப்படம் அல்லாத பின்னணியில் இருந்து வந்த உபாசனா, திரைப்படத் துறையின் இத்தகைய அம்சங்களுடன் சமரசம் செய்வது சவாலாக இருந்ததாகவும், இருப்பினும், ராம் சரண் தனது தொழிலின் தன்மையை பொறுமையாக விளக்கி, இது வேலையின் ஒரு பகுதி என்றும் பல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியது என்றும் புரிய வைத்ததால் காலப்போக்கில், தான் இந்த அம்சங்களைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார். மேலும் அவர்களது உறவில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதையும் அவர் உறுதிபட அதில் தெரிவித்துள்ளார்.