பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் வாரவாரம் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதிக்கப்படும். இந்த நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சிகள் வெளியாகி மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வாரம் எடுத்துக்கொண்ட தலைப்பு தோசை கொண்டாடப்பட வேண்டிய உணவு மற்றும் தோசை சாதாரண உணவு என்ற தலைப்பில் விவாதம் ஏற்பட்டது.

இதில் வீட்டில் தோசை விரும்பி சாப்பிடுபவர்களால் சக உறுப்பினர்கள் படும் அவஸ்தையை இளம்பெண் ஒருவர் கொட்டி தீர்த்து இருக்கிறார். அதிலும் அண்ணன் 22 தோசை சாப்பிடுவாராம். இதனால் அவருடைய தங்கை அரங்கத்தில் புலம்புகிறார். ஆனால் அவருடைய அம்மாவோ அது ஒரு வரம் என்று கூறி அரங்கத்தை ஆச்சர்யப்படுத்தியுள்ளார். இதை கேட்ட கோபிநாத் யார் சாமி அவன்… எனக்கு அவனை பார்க்கணும் போல இருக்கு என்று கூறியிருக்கிறார்…