இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். சென்னை வரும் அவர் விமான நிலையத்தில் புதிய முனைய கட்டிடம், சென்னை மற்றும் கோவை வந்தே பாரத் ரயில் சேவை,தாம்பரம் மற்றும் செங்கோட்டை இடையே வாரம் மூன்று முறை விரைவு ரயில் சேவை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மெரினாவில் விவேகானந்தர் இல்லத்தில் நடைபெறும் நிகழ்சியிலும் பங்கேற்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் அறிவித்துள்ளதால் தமிழக முழுவதும் ஹை அலர்ட் கொடுக்கப்பட்டு ஒரு சின்ன விஷயம் கூட நடந்து விடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. காலையிலிருந்து வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 26 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.