தேசிய கடல் சார் தினத்தை முன்னிட்டு இந்திய கடலோடிகள் நல அமைப்பு சார்பாக சென்னை துறைமுகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சுற்றுச்சூழல் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய சீமான், மீண்டும் சொல்கிறேன் கடலில் பேனா சின்னம் வைத்தால் நான் வந்து நிச்சயம் உடைப்பேன்.

அந்த பேனா அப்படி என்ன எழுதிவிட்டது. கடல் கடலாக இருக்க வேண்டும். அது குப்பைமேடு அல்ல. வடிவேலுவின் கிணத்த காணோம் காமெடி போல, பேனா சின்னத்தை காணாமல் செய்து விடுவேன் என கூறியுள்ளார். ஏற்கனவே மெரினா கடற்கரையில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் வைத்தால் உடைப்பேன் என சீமான் கூறியது பரபரப்பாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.