பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை கிடையாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இன்று சென்னையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைமேடை டிக்கெட்டுகள் வழங்கப்படாது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதனைப் போல பழைய கான்கோர்ஸ் சாலை வழியாக வாகனங்கள் வந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.