பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், அவரை சந்திக்க EPS-OPSக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் மோடியை இருவரும் சேர்ந்து வரவேற்க உள்ளனர். அதன்பின் இருவரிடமும் பிரதமர் தனித்தனியாக சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பின்போது கூட்டணி, தமிழக அரசியல், அதிமுக பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரிடமும் கேட்டறிகிறார். இந்த சந்திப்பு வாயிலாக மீண்டும் இருதரப்பு இணைப்பு நடக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.