EPS-க்கு எதிராக விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரியில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரில், இபிஎஸ் இடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி கோரியது. அதிமுக பொதுச் செயலாளராக செயல்படத் தொடங்கும் இந்த நேரத்தில் திமுக அரசு இதற்கு அனுமதி அளித்தது, EPS-க்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.