மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவைக்கு நேற்று  பிரதமர் மோடி வந்திருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின்  ரோடு ஷோவில் 50 அரசுப் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தபட்டுள்ளது. இதனால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் விசாரணை நடத்திவருகிறார்.

பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கல்வித்துறையிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளதாகவும், விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் உறுதி அளித்தார்.