இந்தியாவில் எதிர்காலத்தில் பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மோடி பிரதமர் ஆவார் என யாராவது எதிர்பார்த்தார்களா?, அவர் முதலமைச்சர் ஆவார் என யாராவது எதிர்பார்த்தார்களா? அவர் சாதாரண ஆர்எஸ்எஸ் தொண்டர்.

அவருடைய உழைப்பால் உயர்ந்தவர். அதேபோல எடப்பாடி பழனிச்சாமியும் உயர்ந்துள்ளார். இந்தியாவிலேயே பெரிய மாநில கட்சி அதிமுக தான். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பிரதமராகும் தகுதி எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே உள்ளது என்று செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.