தமிழக  பா.ஜ.க வின் ஆன்மீகம் மற்றும் மேம்பாட்டு பிரிவு சார்பாக தமிழக அரசின் இந்து விரோத போக்கை கண்டித்தும் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டித்தும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை காலை 10 மணிக்கு ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதேபோல் அண்ணாமலை தலைமையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக கடலூரில்  பா.ஜ.க மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும்.