பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 80க்கும் மேற்பட்டோருக்கு சிந்து மாகாணத்தின் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.