பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்த அமீனா என்பவர் இந்தியாவின் ஜோத்பூர் பகுதியில் உள்ள அபார்ஸ் என்பவரை ஆன்லைனில் திருமணம் செய்துள்ளார். தம்பதியின் இரண்டு குடும்பமும் உறவினர்களான நிலையில் அமீனா மற்றும் அபார்ஸ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் இந்தியாவிற்கு வர அமீனா விசாவுக்கு விண்ணப்பித்த நிலையில் அது கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இவர்களது திருமணம் ஆன்லைனில் நடந்துள்ளது. மணப்பெண் மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஆன்லைனில் திருமணத்தில் பங்கேற்றனர். இத்திருமணம் பற்றி கூறுகையில் “விசா கிடைத்து அமீனா இந்தியாவிற்கு வந்த பிறகு மீண்டும் முறைப்படி திருமணம் செய்து கொள்வோம்” என அபார்ஸ் தெரிவித்துள்ளார்.