உத்தர் பிரதேச மாநிலம் ஹப்பூர் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவர்கள் அதன் மேல் அமர்ந்தும் படிக்கட்டில் தொங்கியவாறும் பேருந்தின் பின்புறம் உள்ள கேரியரில் தொங்கியவாறும் சென்று உள்ளனர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

இதையடுத்து போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு பேருந்து ஓட்டுநருக்கு 22,500 அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதுபோன்று அதிகளவு கூட்டத்தை பேருந்தில் ஏற்றிக்கொண்டு செல்லக்கூடாது என்றும் பேருந்தில் இருப்பவர்கள் பத்திரமாக இருக்கையில் அமர்ந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.