தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளில் மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமக்கல், ராசிபுரம் அருகே தனியார் பள்ளியில் வைட்டமின் மாத்திரைகள் சாப்பிட்ட மாணவர்களுக்கு நேற்று திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியில் கொடுத்த இந்த சத்து மாத்திரைகளை சாப்பிட்ட பிறகு திடீரென்று 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது. இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதே போல மார்ச் 9 ஆம் தேதி சத்து மாத்திரை சாப்பிட்ட ஊட்டியைச் சேர்ந்த மாணவி பாத்திமா மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.