நடிகர் விஜய் தன்னுடைய இயக்கத்தின் மூலமாக கடந்த மாதம் தமிழகத்தில் 234 தொகுதிகளில் உள்ள அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளித்தார். இதனால் விஜயின் செயல்பாடுகள் எல்லாமே அரசியல் வருவதற்கான முன்னேற்பாடுகளாக இருக்கிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்களோடு ஆலோசனை நடத்தினார். தொடர்ச்சியாக 3 நாட்கள் இந்த ஆலோசனை நடைபெறுகிறது. அரசியலில் ஈடுபட்டால் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதெல்லாம் பார்க்கும்போது விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் காமராஜரை பின்தொடர உள்ளது அவரது செயல்கள் மூலம் தெரிகிறது. காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த தனது மக்கள் மன்ற நிர்வாகிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவ, மாணவிகளுக்கு பேனா, நோட்டு போன்ற சிறுசிறு உதவிகளை செய்யவும் மன்ற நிர்வாகிகளை கேட்டுக்கொண்டுள்ளார்