புதுக்கோட்டை மாவட்டம் சேந்தம்பட்டி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் போதிய குடிநீர் வசதியும் கழிப்பறை வசதியும் இல்லை என்று கூறப்படுகிறது.

அதேபோன்று பள்ளியைச் சுற்றி சுற்றி சுவரும் இல்லாததால் பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. ஆகவே பள்ளிக்கு கழிப்பறை வசதியும் சுற்று சுவரும் அமைத்து தர வேண்டும் என மாணவ மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.