ராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில் செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர ரயில் (07695) ஜனவரி 31ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று ரயில் (07696) வருகின்ற 26 ஆம் தேதியும் பிப்ரவரி இரண்டாம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம் – திருப்பதி இடையேயான ரயில்கள் (16854) (16853) ஆகிய ரயில்கள் 29ஆம் தேதியும் பிப்ரவரி 3ஆம் தேதியும் காட்பாடி – திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மயிலாடுதுறை – மைசூர் இடையேயான விரைவு ரயில் (16231) வருகின்ற 27 ஆம் தேதி மற்றும் பிப்ரவரி 3ஆம் தேதிகளில் 60 நிமிடங்கள் தாமதமாக மாலை 6:55 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.