அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் பகுதியில் சேர்ந்தவர் அன்னபட்டு. கணவர் ராமரை பிரிந்து மகனுடன் வாழ்ந்து வந்த அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகல் அளவில் வயலுக்கு சென்ற அன்னபட்டு இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அன்னபட்டுவின் மகன் விக்னேஷ் தனது தாயைத் தேடி சென்றுள்ளார்.

அப்போது வயலில் கழுத்து அறுபட்டு அன்னபட்டு இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் கீழப்பழுவூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்தவர்கள் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.