சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்குடியில் இருந்து வந்த லாரி மீது அந்த வழியாக வந்த மினி வேன் நேருக்கு நேர் மோதியதாக தெரிகிறது. இந்த விபத்தில் மினி வேனில் இருந்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். ஐந்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.