கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேக்காடு கிராமத்தில் மாரியம்மன் கோவில் அருகே செந்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் லாரி ஓட்டுநர். இவருக்கு பூர்ணிமா என்ற மனைவி உள்ளார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பூர்ணிமாவின் மகன் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக பூர்ணிமா தனது மகனுடன் சென்றுவிட்டார்.

இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு பூர்ணிமா அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஆறரை பவுன் தங்க நகை 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.