இந்தியாவில் பல மாநிலங்களில் குளிரில் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜனவரி 15ஆம் தேதி வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போல உத்திரபிரதேச மாநிலத்தில் ஜனவரி 14ஆம் தேதி வரை கால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடும் குளிர் நிலவி வருவதால் டிசம்பர் 30ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் நேரத்தை அரசு மாற்றி அமைத்துள்ளது.

அதன்படி காசியாபாத் மாவட்டத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரையும், பிற மாவட்டங்களில் உள்ள ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளிர் கால விடுமுறை முடிவடைந்த பிறகு எப்போதும் போல பள்ளிகள் செயல்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.