கோவையில் இரவில் பரோட்டா சாப்பிட்டு விட்டு உறங்கச் சென்ற கல்லூரி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகின்றார்.

இவர் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சேர்ந்து கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து காலை அசைவின்றி மாணவன் இருந்த நிலையில் அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.