பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கோட் அஸம் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைக்க பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து ராணுவத்தினர் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டு துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக எட்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்கள் குறுக்கே வந்துள்ளனர். இதில் சிறுவர்கள் இருவரும் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.