தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதி உதவி அளிப்பதாக கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் அறிவித்துள்ளார். இதற்கு முன்னதாக தமிழக அரசு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்த நிலையில் தற்போது கர்நாடகா அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.