பி.எம்.கிசான் திட்டத்தின் மூலம் 10.47 கோடி விவசாயிகள் உதவி பெற்று வந்தனர். இதில், தகுதியில்லாத 1.72 கோடி விவசாயிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஆதார் எண்ணை, சம்பந்தப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்காமல் இருந்ததே, இந்த நீக்கத்திற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. மேலும், திட்டத்தில் சேரும்போது அளித்த நிலமதிப்பு, வருமானம் ஆகியவற்றில் முரண்பாடு இருந்ததால் பலபேர் நீக்கப்பட்டுள்ளனர்.