மேற்கு வங்கத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ள மங்கலகோட்டையைச் சேர்ந்தவர் மன்சூர் அலி ஷேக். இந்த  நபர் சம்பவத்தன்று சுமார் 25-30 கொசுக்களைப் பிடித்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவற்றை மருத்துவரிடம் காட்டி, இந்த கொசுக்கள் தான் கடித்ததாகக் கூறியுள்ளார்.

பின்னர் அவற்றை பரிசோதித்து, முன்கூட்டியே உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் அங்கிருந்த மருத்துவர் உட்பட அனைவரும் வியப்படைந்தனர். வங்காளத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதால் தான் இவ்வாறு செய்ததாக அவர் கூறினார்.