ஐஆர்சிடிசி ஆனது பயணிகள் உடைய திடீர் பயணத்திற்கு தேவையான டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு தட்கல் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக பயணிகள் ஒரு நாளைக்கு முன்னதாகவே தங்களுடைய டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக குறிப்பிட்ட இடங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கும்.  ஏசி வகுப்பில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நேரம் காலை 10 மணி. அதேபோல், ஸ்லீப்பர் வகுப்பில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நேரம் காலை 11 மணி முதல் 12 மணிக்கு முடியும். கொடுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே IRCTC இணையதளம் வழியாக, உங்கள் விவரங்களை உறுதிசெய்து UPI வழியாக கட்டணம் செலுத்தினால், தட்கல் டிக்கெட்டை பெறலாம்.