மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை மீட்போம் என்று பச்சை பொய்யை பேசினார். கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்த காலம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி கால  காலகட்டத்தில் தான் நடந்தது.

கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டது.  1974 – 76 ஆம் ஆண்டு போட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய நாடு இலங்கைக்கு கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது. அப்போது தமிழகத்தில் திரு. கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி தட்டி கேட்கல. போராட்டம் நடத்தல. இன்றைக்கு முதலமைச்சர் வீர வசனம் பேசுகிறார். கட்சி தீவு பறிபோன காரணத்தினால தமிழ்நாட்டின் மீனவர்கள்….  குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

மீனவர்கள் மீன் பிடிக்கின்ற போது அவர்களுடைய வலையை உலர வைப்பதற்கும்,  ஓய்வு எடுப்பதற்கும் கச்சத்தீவை பயன்படுத்தி வந்தார்கள். அந்த உரிமை திமுக அரசாங்கத்தினால் பறிபோனது. மாண்புமிகு அம்மா அவர்கள் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார்கள்.  பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்தார்கள். கச்சத்தீவை மீட்டு தர வேண்டும், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்கள், பலனில்லை என தெரிவித்தார்.