பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் நெருங்கி பழகி அவரை காதலித்தவர். சுகேஷ் சந்திரசேகர் பல தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களை ஏமாற்றி பண மோசடி செய்துள்ளார். அதன் பிறகு ஒரு தொழிலதிபரிடம் 200 கோடி மோசடி செய்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்ட தற்போது திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் நடிகை ஜாக்குலினுக்கு சுமார் 8 கோடி மதிப்பிலான பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

இதே போன்று நடிகைகள் நேரா பதேகி, நிக்கி தம்போலி மற்றும் சாகத் கண்ணா ஆகியோருக்கும் விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை கொடுத்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் ஓவர்சீஸ் சென்சார் போர்டு உறுப்பினரும் திரைப்ப விமர்சகருமான உமர் சந்த் நடிகை ஜாக்குலின் சுகேஷ் சந்திரசேகரால் கர்ப்பம் ஆகிபின் கருக்கலைப்பு செய்ததாக தன்னுடைய twitter பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில் பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.