சென்ற சில மாதங்களுக்கு முன்பு நடிகை சமந்தா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அதாவது, மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்து வந்தார். இதையடுத்து அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுவந்த சமந்தா பழைபடி படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும் சுறுசுறுப்பாக ஜிம் ஒர்கவுட் செய்யும் வீடியோக்களை கூட வெளியிட்டு இருந்தார்.

இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சையில் இருந்தபோது அவரது தாய் தான் சமந்தாவை பக்கத்தில் இருந்து பார்த்துக்கொண்டாராம். தற்போதும் சமந்தாவுடன் தான் இருக்கிறாராம். விவாகரத்துக்கு பிறகு சமந்தா சென்னைக்கு வந்து விடுவார் என அனைவரும் எண்ணினர். ஆனால் சமந்தா ஹைதராபாத்தில் சொந்த வீடு மற்றும் சில சொத்துக்களை வாங்கி வைத்திருப்பதால் ஹைத்ராபாத்தில் வசிக்க முடிவெடுத்துள்ளாராம்.